Education

இஸ்லாமிய பார்வையில் கல்வி 

இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கனணி (computer), மின்அஞ்சல் (e-mail), இணையம் (Internet)இ டிஜிடல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என நம்பப்படுகின்றது. மறுபக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் போலாக்கம் (cloning) எனும் செயற்பாடு உலகை பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இத்தகைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் மத நம்பிக்கையானது கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றது. இது அறிவியல் யுகம்; மதத்துக்குரிய காலமல்ல் மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்து விட்டது; நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு பின்வருவன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.
  1. அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சம கால மேற்குலகின் அனைத்துத் துறை சார்ந்த முன்னேற்றத்திற்கும் அது மதத்தை நிராகரித்து அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும்.
  2. மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களைக் கொண்டது.அவையாவன :
    1. சமயம்
    2. தத்துவம்
    3. அறிவியல்
  3. மூன்றாம் கட்டமே இறுதிக் கட்டமாகும்.
  4. மதம் என்பது அபினைப் போன்றது. மனித சமூகம் அதிலிருந்து விடுபடாத வரை அதற்கு விடுதலை இல்லை; சுபீட்சம் இல்லை.
அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகம் தோன்ற முடியாது என்பது ஒரு பேருண்மையாகும். ஆயினும் மதம் அறிவியலுக்கு முரணானது; அது அறிவியலை ஆட்சேபிக்கின்றது என்ற வாதம் பிழையானதாகும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடை பெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்த ஐரோப்பிய நோக்காகும். மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உலகில் வேறு எங்கும் போராட்டங்கள் நிகழவில்லை. அது ஐரோப்பாவிலேயே நிகழ்ந்தது. மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக எங்கும் அமைந்ததில்லை. ஐரோப்பாவில் தான் கிறிஸ்தவக் கோயில் அறிவு, ஆராய்ச்சிக்கும் சுதந்திரமான சிந்தனைக்கும் எதிராக வரலாற்றின் மத்திய காலப்பிரிவில் செயற்பட்டது.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமாகும்.

அறிவு ஆராய்ச்சிக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் நபி (ஸல்) அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்கள் என்பதற்கு அவர்களின் ஸீராவில் ஏராளமான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

'திட்டமிடல்' என்பது பிரதான அறிவியல் அணுகுமுறையாகும். அல்-குர்ஆன் நபி யூஸுப் (அலை) அவர்களின் பதினைந்தாண்டு பொருளாதாரத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதற்கூடாக எவ்வாறு அன்று எகிப்தும் அதைச்சூழவுள்ள பிரதேசங்களும் பெரும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றப்பட்டன என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நபி (ஸல்) அவர்களும் தனது பிரச்சார வாழ்க்கையில் எவ்வாறு நுணுக்கமாக திட்டங்களைத் தீட்டிச் செயற்பட்டார்கள் என்பதனைக் காணமுடிகிறது. முதலாம் ஹிஜ்ரத், இரண்டாம் ஹிஜ்ரத், யுத்தங்கள் முதலானவை இதற்கு சிறந்த ஆதாரங்களாகும்.

'கணக்கெடுப்பு' என்பது மற்றுமோர் அணுகுமுறையாகும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்று சில நாட்களிலேயே அங்குள்ள முஸ்லிம்களின் சனத்தொகையை கணக்கெடுக்குமாறு பணித்தார்கள். அவர்களின் தொகை அப்போது 1500 ஆக இருந்தது. (புஹாரி)

இன்னுமோர் அறிவியல் போக்கான 'பரிசோதனை' முறையையும் நபி (ஸல்) அவர்கள் ஏற்று அங்கீகரித்தார்கள். ஈத்த மர மகரந்த மணிச்சேர்க்கைச் சம்பவம் இதற்கு சிறந்த சான்றாகும். (முஸ்லிம்)

நம்பிக்கைகள், விழுமியங்கள், பெறுமானங்கள், சட்டதிட்டங்கள் முதலான வற்றுடன் தொடர்பற்ற உலகாயத, தொழில்நுட்ப விவகாரங்களில் அந்நியரின் உதவியை நாடுதல், ஆலோசனைகளைப் பெறுதல் பிழையானவையல்ல என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தனது செயற்பாடுகள் மூலம் எடுத்துக்காட்டினார்கள். பாரசீகர்களின் வழிமுறையான யுத்தத்தின் போது அகழி வெட்டும் உத்தியை ஸல்மான் (றழி) அவர்கள் கூறியபோது அதனை ஏற்று செயற்பட்டமை, அன்னார் குத்பா பிரசங்கம் செய்வதற்காக ஓர் உரோம தச்சன் ஒரு மின்பரை செய்து கொடுத்தமை முதலியன சில உதாரணங்களாகும்.

இஸ்லாமிய நோக்கில் கல்வி என்பது பாடபோதனையுடன் மட்டுப்படத்தப்பட்ட ஒன்றல்ல. மாணவனது மூளையில் தகவல்களைத் திணிப்பது அதன் நோக்கமல்ல. அது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுமல்ல. மாறாக, அது தனிமனிதனது ஆளுமையின் பரிபூரண வளர்ச்சிக்குத் துணை புரியக் கூடியதாக அமைய வேண்டும்.

ஆளுமை என்பது மனிதனது உடல், உள்ளம், உணர்வு, சிந்தனை, அறிவு, ஆன்மா, நடத்தை, பண்பாடு போன்ற அனைத்துடனும் தொடர்புள்ளது என்பது இஸ்லாத்தின் கருத்து. இஸ்லாமிய கல்வியின் நோக்கம், மனிதனது ஆளுமை முழுமையாக வளர்ந்து, ஓர் உன்னதமான மனிதனை உருவாக்குவதாகும்.
குறிப்பாக இஸ்லாமிய கல்வியின் ஆன்மாவாக அமைவது பண்பாட்டுப் பயிற்சியாகும். மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டுக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகக் கல்விப் போதனை அமைய வேண்டும் என்பதில் இஸ்லாம் கண்டிப்பாக உள்ளது.

கல்வித் துறையில் பூரண சுதந்திரம் பேணப்படல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். கல்வித் துறையில் சமத்துவம் பேணப்படுவதுடன் அனைவருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. இந்த வகையில், இஸ்லாமிய கல்விமுறை அமுலில் இருந்த இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டன.

அங்கு தரவேறுபாடு கருத்திற் கொள்ளப்படவில்லை. வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கவில்லை. சான்றிதழ்கள், புள்ளிகள் போன்றன பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளப்படவுமில்லை. கல்வி, கேள்வி, ஆய்வு போன்றவற்றில் ஆர்வமும், ஈடுபாடுமே பிரவேசத்திற்கான தகைமைகளாகக் கொள்ளப்பட்டன.

Source: http://www.sheikhagar.org/articles/education/101-education2
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய நற்பண்புகளையும், இஸ்லாமிய மனப்பாங்கையும், உணர்வுகளையும் கொண்ட இஸ்லாமிய தனித்துவத்தை உருவாக்குவதே ஒரு முஸ்லிமைப்பொருத்தவரையில் கல்வியின் நோக்கமாக அமையவேண்டும். 

கல்வி கற்பித்தலின் அனைத்து நிலையிலும் (பள்ளிப் பரவம் முதல் பல்கலைக் கழகம் வரை) இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் போதிக்கப்படவேண்டும்.

இதற்கு இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தின்மீது மட்டுமே கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

ஆகவே பயிற்றுவிக்கப்படவேண்டிய பாடங்களும் பயிற்றுவிப்பு முறைகளும் இந்த அடிப்படையில் இருந்து விலகிச் செல்லாதவாறு அவைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறானதொரு கல்விக் கொள்கையை கொண்ட அரசு இருக்குமாயின் அங்கு மக்களிடம் இஸ்லாமிய அறிவு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கொண்ட இஸ்லாமிய பிரஜைகளை உருவாக்க முடியும்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று நாம் மேற்கினது காலனித்துவ கல்விக் கொள்கையை பின்பற்றி நிலையில் உலகில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் ஆட்சி செய்யப்படுவதால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதிலும் அதனை ஒழுகிடுவதிலும் மிகப்பெரிய இடைவெளி உருவாகியுள்ளது.

மேற்கத்தேய மதஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்ட முதலாளிகளது நலன்களை பேணுவதற்கு தேவையான வெறும் மனித மூளைசாலிகளையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கும் சடவாதக் கல்விமுறையில் எமது சிறுவர்கள் முதல் பெரியோர்வரை பயிற்றுவிக்கப்படுவதால் இக்கல்வியை பெற்ற கல்வி நிபுனர்கள் மற்றும் கல்விமான்களிடம் இஸ்லாமிய உணர்வு, அறிவு, பண்பாடுகள் மிகவும் அரிதாகவே பிரதிபலிப்பதனைக் காணலாம்.

இதனால்தான் இன்று எமது கற்ற இளைஞர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, இஸ்லாமிய அறிவு இல்லாத நிலையில் மேற்கினது கலாச்சார பண்பாட்டினது தாக்கத்திற்கு ஆட்பட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதனையும் மறுமைபற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருப்பதனையும் காணலாம்.

இத்தகைய துர்பாக்கிய நிலையில் இருந்து முஸ்லிம் சமூம் எழுச்சி பெறத் தேவையான இஸ்லாமிய கல்விக்கொள்கைகள் உலகில் அமுல்படுத்தப்படவேண்டும்.

அதற்குத் தேவையான இஸ்லாமிய உலக தலைமைத்துவம் மீள நபி வழியில் உருவாக்கப்படவேண்டும்.

அந்த தலைமைத்துவத்தினால் இஸ்லாமிய அடித்தளத்தில் வகுக்கப்படும் கல்விக்கொள்கையின் தாக்கம் மற்றும் பிரதிபலிப்பு இன்றுள்ள முதலாளித்துவ கல்விக் கொள்கையை மாற்றீடு செய்ய வேண்டும். அதுவே மனித சமூகம் அறிவு, கலாச்சாரம். பண்பாடு போன்றவற்றில் மேலோங்கிடவும் நீதி, நிறுவாகம் சிறக்கவும் மனித சமூகம் ஈருலகிலும் ஈடேற்றம் பெறவும் வழிவகுக்கும்.
- See more at: http://islamicuprising.blogspot.com/2013/08/blog-post_6405.html#sthash.k3ehmgyG.dpuf

 

முஸ்லிம்களிடம் இஸ்லாமிய நற்பண்புகளையும், இஸ்லாமிய மனப்பாங்கையும், உணர்வுகளையும் கொண்ட இஸ்லாமிய தனித்துவத்தை உருவாக்குவதே ஒரு முஸ்லிமைப்பொருத்தவரையில் கல்வியின் நோக்கமாக அமையவேண்டும். 

கல்வி கற்பித்தலின் அனைத்து நிலையிலும் (பள்ளிப் பரவம் முதல் பல்கலைக் கழகம் வரை) இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் போதிக்கப்படவேண்டும்.

இதற்கு இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தின்மீது மட்டுமே கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

ஆகவே பயிற்றுவிக்கப்படவேண்டிய பாடங்களும் பயிற்றுவிப்பு முறைகளும் இந்த அடிப்படையில் இருந்து விலகிச் செல்லாதவாறு அவைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறானதொரு கல்விக் கொள்கையை கொண்ட அரசு இருக்குமாயின் அங்கு மக்களிடம் இஸ்லாமிய அறிவு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கொண்ட இஸ்லாமிய பிரஜைகளை உருவாக்க முடியும்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று நாம் மேற்கினது காலனித்துவ கல்விக் கொள்கையை பின்பற்றி நிலையில் உலகில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் ஆட்சி செய்யப்படுவதால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதிலும் அதனை ஒழுகிடுவதிலும் மிகப்பெரிய இடைவெளி உருவாகியுள்ளது.

மேற்கத்தேய மதஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்ட முதலாளிகளது நலன்களை பேணுவதற்கு தேவையான வெறும் மனித மூளைசாலிகளையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கும் சடவாதக் கல்விமுறையில் எமது சிறுவர்கள் முதல் பெரியோர்வரை பயிற்றுவிக்கப்படுவதால் இக்கல்வியை பெற்ற கல்வி நிபுனர்கள் மற்றும் கல்விமான்களிடம் இஸ்லாமிய உணர்வு, அறிவு, பண்பாடுகள் மிகவும் அரிதாகவே பிரதிபலிப்பதனைக் காணலாம்.

இதனால்தான் இன்று எமது கற்ற இளைஞர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, இஸ்லாமிய அறிவு இல்லாத நிலையில் மேற்கினது கலாச்சார பண்பாட்டினது தாக்கத்திற்கு ஆட்பட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதனையும் மறுமைபற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருப்பதனையும் காணலாம்.

இத்தகைய துர்பாக்கிய நிலையில் இருந்து முஸ்லிம் சமூம் எழுச்சி பெறத் தேவையான இஸ்லாமிய கல்விக்கொள்கைகள் உலகில் அமுல்படுத்தப்படவேண்டும்.

அதற்குத் தேவையான இஸ்லாமிய உலக தலைமைத்துவம் மீள நபி வழியில் உருவாக்கப்படவேண்டும்.

அந்த தலைமைத்துவத்தினால் இஸ்லாமிய அடித்தளத்தில் வகுக்கப்படும் கல்விக்கொள்கையின் தாக்கம் மற்றும் பிரதிபலிப்பு இன்றுள்ள முதலாளித்துவ கல்விக் கொள்கையை மாற்றீடு செய்ய வேண்டும். அதுவே மனித சமூகம் அறிவு, கலாச்சாரம். பண்பாடு போன்றவற்றில் மேலோங்கிடவும் நீதி, நிறுவாகம் சிறக்கவும் மனித சமூகம் ஈருலகிலும் ஈடேற்றம் பெறவும் வழிவகுக்கும்.
- See more at: http://islamicuprising.blogspot.com/2013/08/blog-post_6405.html#sthash.k3ehmgyG.dpuf
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய நற்பண்புகளையும், இஸ்லாமிய மனப்பாங்கையும், உணர்வுகளையும் கொண்ட இஸ்லாமிய தனித்துவத்தை உருவாக்குவதே ஒரு முஸ்லிமைப்பொருத்தவரையில் கல்வியின் நோக்கமாக அமையவேண்டும். 

கல்வி கற்பித்தலின் அனைத்து நிலையிலும் (பள்ளிப் பரவம் முதல் பல்கலைக் கழகம் வரை) இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் போதிக்கப்படவேண்டும்.

இதற்கு இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தின்மீது மட்டுமே கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

ஆகவே பயிற்றுவிக்கப்படவேண்டிய பாடங்களும் பயிற்றுவிப்பு முறைகளும் இந்த அடிப்படையில் இருந்து விலகிச் செல்லாதவாறு அவைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறானதொரு கல்விக் கொள்கையை கொண்ட அரசு இருக்குமாயின் அங்கு மக்களிடம் இஸ்லாமிய அறிவு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கொண்ட இஸ்லாமிய பிரஜைகளை உருவாக்க முடியும்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று நாம் மேற்கினது காலனித்துவ கல்விக் கொள்கையை பின்பற்றி நிலையில் உலகில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் ஆட்சி செய்யப்படுவதால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதிலும் அதனை ஒழுகிடுவதிலும் மிகப்பெரிய இடைவெளி உருவாகியுள்ளது.

மேற்கத்தேய மதஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்ட முதலாளிகளது நலன்களை பேணுவதற்கு தேவையான வெறும் மனித மூளைசாலிகளையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கும் சடவாதக் கல்விமுறையில் எமது சிறுவர்கள் முதல் பெரியோர்வரை பயிற்றுவிக்கப்படுவதால் இக்கல்வியை பெற்ற கல்வி நிபுனர்கள் மற்றும் கல்விமான்களிடம் இஸ்லாமிய உணர்வு, அறிவு, பண்பாடுகள் மிகவும் அரிதாகவே பிரதிபலிப்பதனைக் காணலாம்.

இதனால்தான் இன்று எமது கற்ற இளைஞர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, இஸ்லாமிய அறிவு இல்லாத நிலையில் மேற்கினது கலாச்சார பண்பாட்டினது தாக்கத்திற்கு ஆட்பட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதனையும் மறுமைபற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருப்பதனையும் காணலாம்.

இத்தகைய துர்பாக்கிய நிலையில் இருந்து முஸ்லிம் சமூம் எழுச்சி பெறத் தேவையான இஸ்லாமிய கல்விக்கொள்கைகள் உலகில் அமுல்படுத்தப்படவேண்டும்.

அதற்குத் தேவையான இஸ்லாமிய உலக தலைமைத்துவம் மீள நபி வழியில் உருவாக்கப்படவேண்டும்.

அந்த தலைமைத்துவத்தினால் இஸ்லாமிய அடித்தளத்தில் வகுக்கப்படும் கல்விக்கொள்கையின் தாக்கம் மற்றும் பிரதிபலிப்பு இன்றுள்ள முதலாளித்துவ கல்விக் கொள்கையை மாற்றீடு செய்ய வேண்டும். அதுவே மனித சமூகம் அறிவு, கலாச்சாரம். பண்பாடு போன்றவற்றில் மேலோங்கிடவும் நீதி, நிறுவாகம் சிறக்கவும் மனித சமூகம் ஈருலகிலும் ஈடேற்றம் பெறவும் வழிவகுக்கும்.
- See more at: http://islamicuprising.blogspot.com/2013/08/blog-post_6405.html#sthash.k3ehmgyG.dpuf
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய நற்பண்புகளையும், இஸ்லாமிய மனப்பாங்கையும், உணர்வுகளையும் கொண்ட இஸ்லாமிய தனித்துவத்தை உருவாக்குவதே ஒரு முஸ்லிமைப்பொருத்தவரையில் கல்வியின் நோக்கமாக அமையவேண்டும். 

கல்வி கற்பித்தலின் அனைத்து நிலையிலும் (பள்ளிப் பரவம் முதல் பல்கலைக் கழகம் வரை) இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் போதிக்கப்படவேண்டும்.

இதற்கு இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தின்மீது மட்டுமே கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

ஆகவே பயிற்றுவிக்கப்படவேண்டிய பாடங்களும் பயிற்றுவிப்பு முறைகளும் இந்த அடிப்படையில் இருந்து விலகிச் செல்லாதவாறு அவைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறானதொரு கல்விக் கொள்கையை கொண்ட அரசு இருக்குமாயின் அங்கு மக்களிடம் இஸ்லாமிய அறிவு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கொண்ட இஸ்லாமிய பிரஜைகளை உருவாக்க முடியும்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று நாம் மேற்கினது காலனித்துவ கல்விக் கொள்கையை பின்பற்றி நிலையில் உலகில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் ஆட்சி செய்யப்படுவதால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதிலும் அதனை ஒழுகிடுவதிலும் மிகப்பெரிய இடைவெளி உருவாகியுள்ளது.

மேற்கத்தேய மதஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்ட முதலாளிகளது நலன்களை பேணுவதற்கு தேவையான வெறும் மனித மூளைசாலிகளையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கும் சடவாதக் கல்விமுறையில் எமது சிறுவர்கள் முதல் பெரியோர்வரை பயிற்றுவிக்கப்படுவதால் இக்கல்வியை பெற்ற கல்வி நிபுனர்கள் மற்றும் கல்விமான்களிடம் இஸ்லாமிய உணர்வு, அறிவு, பண்பாடுகள் மிகவும் அரிதாகவே பிரதிபலிப்பதனைக் காணலாம்.

இதனால்தான் இன்று எமது கற்ற இளைஞர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, இஸ்லாமிய அறிவு இல்லாத நிலையில் மேற்கினது கலாச்சார பண்பாட்டினது தாக்கத்திற்கு ஆட்பட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதனையும் மறுமைபற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருப்பதனையும் காணலாம்.

இத்தகைய துர்பாக்கிய நிலையில் இருந்து முஸ்லிம் சமூம் எழுச்சி பெறத் தேவையான இஸ்லாமிய கல்விக்கொள்கைகள் உலகில் அமுல்படுத்தப்படவேண்டும்.

அதற்குத் தேவையான இஸ்லாமிய உலக தலைமைத்துவம் மீள நபி வழியில் உருவாக்கப்படவேண்டும்.

அந்த தலைமைத்துவத்தினால் இஸ்லாமிய அடித்தளத்தில் வகுக்கப்படும் கல்விக்கொள்கையின் தாக்கம் மற்றும் பிரதிபலிப்பு இன்றுள்ள முதலாளித்துவ கல்விக் கொள்கையை மாற்றீடு செய்ய வேண்டும். அதுவே மனித சமூகம் அறிவு, கலாச்சாரம். பண்பாடு போன்றவற்றில் மேலோங்கிடவும் நீதி, நிறுவாகம் சிறக்கவும் மனித சமூகம் ஈருலகிலும் ஈடேற்றம் பெறவும் வழிவகுக்கும்.
- See more at: http://islamicuprising.blogspot.com/2013/08/blog-post_6405.html#sthash.k3ehmgyG.dpuf

Comments

Popular posts from this blog

கணினி கலைச் சொற்கள்

தரவுத்தளம் - பகுதி 01

இணையம்